கரூர், ஏப். 6: கரூர் மாவட்ட கூடைபந்து கழக பொறுப்பாளர்கள் செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறியிருப்பதாவது, 18 வயதிற்கு உட்பட்டவருக்கான மாநில அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி பெண்களுக்கு ஏப்ரல் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலும், ஆண் களுக்கு போட்டிகள் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் இன்னைக்கு இருந்த தொட்டியம் கொங்குநாடு கல்லூரியில் நடைபெற உள்ளது.
இதற்கான கரூர் மாவட்ட அணிக்கு வீரர் மற்றும் வீராங்கனை தேர்விற்கு 01/01/2006 பின்னர் பிறந்த வீரர்கள், வீராங்கனைகள் நாளை (7ம் தேதி) திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் வீரர்கள், வீராங்கனைகள், தேர்வு நடைபெற உள்ளது. எனவே கரூர் மாவட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள செல்போன் 9894979601, 9791952759 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
The post மாநில அளவிலான 18 வயது உட்பட்டோருக்கான கூடைப்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு appeared first on Dinakaran.